உள்நாடு

அக்கரைப்பற்று கல்வி வலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர்தர கணித விஞ்ஞான பிரிவு மாணவர்களின் பௌதீகவியல் பரிசோதனை கருத்தரங்கு – ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில்

அக்கரைப்பற்று கல்வி வலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர்தர கணித விஞ்ஞான பிரிவு மாணவர்களின் பௌதீகவியல் பரிசோதனை கருத்தரங்கு ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் அஷ் ஷெய்க் யூ.கே. அப்துர் ரஹீம் (நளிமி) தலைமையில் இன்று (17) ஆரம்பமானது.

இந்த ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலைய கல்வி பணிப்பாளர் அஷ்-ஷெய்க் ஏ.எம். ரஹ்மத்துல்லா அவர்களும் கௌரவ அதிதிகளாக அக்கரைப்பற்று வலைய பிரதி கல்விப் பணிப்பாளர்களான திருமதி எம். எம். சித்தி பாத்திமா, திருமதி பி (B) ஜிஹானா, ஏ.எல்.ஏ. மஜீட் ஆகியோரும் மற்றும் விஞ்ஞான பாட உதவிக் கல்வி பணிப்பாளர் எம். என்.எம்.மஸீன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இதேவேளை பாடசாலைக்கு திடீர் விஜயமொன்றினை மேற்கொண்ட கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் அவர்கள் வருகை தந்து பரிசோதனை கூடத்தை திறந்து வைத்து பார்வையிட்டதுடன், மாணவர்களின் முயற்சியினையும் பாராட்டினார்.

மேலும் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு மூலமாக எதிர்காலத்தில் இப்பாடசாலை மற்றும் அக்கரைப்பற்று வலய பாடசாலை மாணவர்களின் அடைவு மட்டம் மேம்படும் என்றும் அதற்காக வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இப்பெளதீகவியல் கருத்தரங்கில் மாணவர்களின் துறை சார்ந்த பரிசோதனைகள் கூடம் அதிதிகளால் திறந்து வைக்கப்பட்டதுடன் ஒவ்வொரு பரிசோதனை முறைகள் தொடர்பாகவும் மாணவர்களால் அதிதிகளுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது.

இரண்டு நாள் நிகழ்வாக நடைபெற உள்ள இப்பரிசோதனை காட்சிக்கூடத்தினை அக்கரைப்பற்று வலையத்தின் 08 உயர்தர சாலைகள் கலந்து பார்வையிடவுள்ளதுடன் முதல் நாளான இன்று நான்கு பாடசாலைகள் பார்வையிட்டன.

இந்த இரண்டு நாள் நிகழ்வினையும் பல சிரமங்களுக்கு மத்தியில் ஒழுங்கமைத்து, வழிநடாத்திவரும் பாடசாலையின் கணித, விஞ்ஞானப் பிரிவு ஆசிரியர்களான எம்.ஏ.சி.எம். இஹ்சாஸ், எம்.எஸ்.உஸாமா, எம்.ஐ.முஸ்பிரா ஆகிய ஆசிரியர்கள் உட்பட அதிபர், பிரதி அதிபர்கள் உதவி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

(எஸ்.அஷ்ரப்கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *