உள்நாடு

இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ள நீண்ட வரிசை – நான்கு வருடங்களும் காத்திருக்க வேண்டுமாம்…!

இலங்கையில் சில வைத்தியசாலைகளில் இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ள நீண்ட கியூ வரிசை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், காலி – காராபிட்டிய போதனா வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ள பதிவு செய்தால், நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, இருதய சத்திர சிகிச்சைக்காக இந்த வருடம் பதிவு செய்தவர்களுக்கு, 2028 ஆம் ஆண்டில் திகதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

 

( ஐ. ஏ. காதிர் கான் )

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *