உள்நாடு

நடுத்தீவு பிரதேசத்தில் இரத்ததான நிகழ்வு

மூதூர் நடுத்தீவு பிரதேச சமூக வலுவூட்டல் நலன்புரி அமைப்பினால் இரத்ததான நிகழ்வு(13/7/24)சனியன்று மூதூர் கலாச்சார மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“உதிரம் கொடுத்து உயிர் காப்போம்”எனும் தொனிப்பொருளில் மூதூர் தழுவிய நிலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள் முற்படையினர் சமூக அமைப்புகள் அரச ஊழியர்கள் உள்ளிட்ட ஆண்கள் பெண்கள் என நூற்றூக்கணக்கானோர் இரத்த தானம் வழங்கினர்.இந்நிகழ்வில் மூதூர் தள வைத்தியசாலை நிர்வாகமும் news அமைப்பினரும் இணைந்து மிகச்சிறப்பாக செயற்பட்ட மை குறிப்பிடத்தக்கது.


(மூதூர் – பறூஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *