உள்நாடு

சீனன்கோட்டை இரத்தினக்கல் பிரமுகர்கள், அனுர குமார சந்திப்பு

பேருவளை சீனங்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகசங்க உறுப்பினர்களுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்கவுக்குமிடையிலான சந்திப்பொன்று 15 ஆம் திகதி இரவு சீனங்கோட்டை ஜெம் டவர் கட்டிடத்திலுள்ள மேற்படி சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

சங்க உபதலைவர் அல்ஹாஜ் ரிஸ்வான் நயீம் ,செயலாளர் அல்ஹாஜ் அஷ்கர் அலி முபாரக் ,முன்னாள் பேருவளை நகரசபை உறுப்பினர் அரூஸ் அஸாத் உட்பட சங்க முக்கியஸ்தர்கள்,முன்னணி இரத்தினக்கல் வர்த்தகர்கள் இச்சந்திப்பில் பங்குபற்றினர்.

நாட்டுக்கு அந்நியச்செலாவணியை ஈட்டிக்கொடுக்கும் முக்கிய தொழில்துறைகளில் ஒன்றான இரத்தினக்கல் வர்த்தகத்துறையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் பற்றி எடுத்துக்கூறப்பட்டது. இத்துறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியம் பற்றியும்,எதிர்காலத்தில் மேற்கொள்ளவேண்டிய திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

எதிர்காலத்தில் இரத்தினக்கல் வர்த்தகத் துறையை மேம்படுத்த வேண்டிய வேலைத்திட்டங்கள் அடங்கிய ஆவணமொன்றும் இதன்போது அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.


(பேருவளை : பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *