உள்நாடு

காத்தான்குடியில் 100 பேருக்கு சமூகபிமானி விருது வழங்கி கெளரவிப்பு…!

வாரவலம் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (12) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம் பெற்ற கெளரவிப்பு நிகழ்வின் போது காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு துறைகளில் அர்ப்பணிப்புடன் சமூகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் 100 துறைசார் பணியாளர்கள் “சமூகபிமானி” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

வார வலம் வலையமைப்பின் பணிப்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள் ராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன்,சங்கைக்குரிய பொகவந்தலாக ராகுல தேரர், உட்பட பலர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

வாரவலம் செய்தி பத்திரிகையின் இரண்டாவது ஆண்டு சிறப்பு மலர் வெளியிடப்பட்டதுடன் அதன் முதன்மை பிரதியை பிரபல தொழிலதிபர் முபாறக்ஸ் டெக்ஸ் குறூப் பிரைவேட் லிமிடெட் கலாநிதி எம்.எஸ்.எம்.முபாரக் பெற்றுக் கொண்டதுடன் சிறப்பு பிரதியை தொழிலதிபர் சன்சைன் குறூப் பிரைவேட் லிமிடெட் எஸ். நந்தகுமாரன் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் உதயம் பத்திரிகையின் காத்தான்குடி நிருபர் ஊடகவியலாளர் எம்.பஹ்த் ஜுனைட் உட்பட பத்திற்க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் “சமூகபிமானி” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *