உள்நாடு

வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெண் கைது..!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுக்களை சட்டவிரோதமாகக் கொண்டுவந்த பெண் ஒருவர், நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர், துபாயில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணி புரிந்துவிட்டு, நாடு திரும்பியபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளார்.
இவர் களனி பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார். துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இப்பெண், நேற்று அதிகாலை 5.50 மணியளவில் அனைத்து சோதனைகளையும் முடித்துக்கொண்டு விமான நிலையத்தை விட்டும் வெளியேற முற்பட்டபோதே கைதுசெய்யப்பட்டார்.
இவர் கொண்டு வந்த இரண்டு பயணப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 20,000 “மான்செஸ்டர்” சிகரெட்டுக்கள் அடங்கிய 100 சிகரெட் பெட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர், எதிர்வரும் 17 ஆம் திகதி சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்களுடன், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *