உள்நாடு

பேருவளை பாஸிய்யதுல் நஸ்ரியாவில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா

பேருவலை மருதானை அல்-பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலயத்தில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா மற்றும் இணையத்தள அங்குராப்பண நிகழ்வு(16ம் திகதி 16-7-2024) மு.ப.9:30 மணிக்கு அதிபர் மஸ்னவியா மூசீன் தலைமையில் நடைபெறவுள்ளது.

களுத்துறை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.பி. பீரிஸ் பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.

பேருவலை கோட்ட கல்விப் பனிப்பாளர் திருமதி எம்.ஆர்.பி.லியனகே,தர்கா நகர் தேசிய கல்வியற் கல்லூரி முதல்வர் எஸ்.பவானந்தன், தேசிய மருந்தாக்கக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவரும் ரூமி ஹாஷிம் பவுண்டேசன் ஸ்தாபகருமாண டொக்டர் ரூமி ஹாஷிம் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும்,முன்னாள் கோட்டக் கல்விப்பணிப்பாளர் டப்ளியூ.ஏ.ஜே.யு. சோமரத்ன, முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம். இல்யாஸ் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொள்வர்.

நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இப்பாடசாலை இலங்கையில் முதலாவது முஸ்லிம் மகளிர் கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், ஊர் பிரமுகர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவிகள் என பலரும் பங்குபற்றுவர்.

 

(பேருவலை பீ எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *