உள்நாடு

அறிவுக்களஞ்சிய போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்ற வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை..!

அறிவுக்களஞ்சிய போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்ற வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை நிருவாகம் தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளது.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் முஸ்லீம் சேவை பிரிவினால் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான அறிவுக்களஞ்சியப் போட்டி நிகழ்ச்சியை வாழைச்சேனை அந் நூர் தேசியபாடசாலை பிரதான மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை நடாத்தியது.

மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பதினொரு பாடசாலைகள் பங்குபற்றிய அறிவுக்களஞ்சிய போட்டியில் முதலாம் இடத்தினை வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலையும் இரண்டாம் இடத்தினை ஓட்டமாவடி தேசிய பாடசாலையும் மூன்றாம் இடத்தினை காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயமும் பெற்றுக் கொண்டது.

அறிவுக்களஞ்சிய போட்டியில் பங்கு பற்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டமைக்காக வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை நிருவாகம் பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பன போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *