உள்நாடு

அதிக புகையை வெளியிடும் வாகனங்கள் தொடர்பில் 070 3500 525 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அனுப்ப சந்தர்ப்பம்..!

அதிக புகையை வெளியிடும் வாகனங்களை, கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன மற்றும் வாகன உமிழ்வுப் பரிசோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளது.
வீதியில் பயணிக்கும் இவ்வாறான வாகனங்கள் தொடர்பில்,
070 3500 525
என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு முறைப்பாடுகளை அனுப்புவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, அதன் பணிப்பாளர் தசுன் கமகே குறிப்பிட்டுள்ளார்.
வாகன அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக மாத்திரம் புகை சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வேண்டாம் எனவும், தசுன் கமகே சாரதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
போலியான தந்திரோபாயங்கள் மூலம் புகைப் பரிசோதனைச் சான்றிதழ்களைப் பலர் பெறுகின்ற போதிலும், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகனத் திணைக்கள அதிகாரிகள் வீதியில் வாகனங்கள் செலுத்தும் போது, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அதிக புகை வெளியேறுவதை அவதானிக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக பராமரிப்பு உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், இல்லையெனில் குறித்த வாகனத்திற்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *