உள்நாடு

பொதுத் தகவல் தொழில்நுட்ப பாடத்திற்கான பெறுபேறுகள் வெளியாகின

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்பப் பாடத்திற்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த பரீட்சைக்கு, 521,072 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பெறுபேறுகளை, www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் பார்வையிட முடியும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *