உள்நாடு

செனரத்கம விபத்தில் இருவர் காயம்..!

பாதெனிய அனுராதபுரம் வீதியில் செனரத்கம பகுதியில் (13) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

அனுராதபுரத்தில் இருந்து பயணித்த கெப் வாகனம் ஒன்றின் சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டமையினால் எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிலுடன் நேருக்கு நேர் மோதி  குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *