முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட கட்சிக் கிளைகள் புனரமைப்பு வேலை திட்டம்..!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தொடர்பாகவும், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேசங்களின் கட்சிக் கிளைகள் புனரமைப்பு வேலை திட்டம் தொடர்பாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உச்சபீட உறுப்பினரும் மாவட்ட செயற்குழு செயளாலருமான ஏ.சீ. சமால்டீன் அவர்களின் தலைமையில் விசேட கூட்டம் 09.07.2024 அன்று அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேசங்களில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளருமான ஏ.எல் தவம், அட்டாளைச்சேனை முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு தலைவர் எஸ்.எல்.ஏ. ஹளீம், மத்திய குழு செயலாளர் எம்.ஏ.சீ. ஹாரீத் (Tr), கல்முனை மாநகர சபையின் வேட்பாளர் எம்.எம்.எம். பாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கிளைகள் புனரமைப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பது எனவும், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 03 இளைஞர் கிளைகளையும், 09 மகளிர் கிளைகளையும் புனரமைக்கும் பணிகள் தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டது.
(மாளிகைக்காடு செய்தியாளர்)