ஜனாதிபதி தேர்தல் மனு; திங்கள் விசாரணை!
ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படுவதை இடை நிறுத்துமாறு கோரி சட்டத்தரணி ஆருண லக்ஸிரியால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை (15) திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.
19வது அரசியல் திருத்தம் பாராளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படாததால் ஜனாதிபதி தேர்தல் நடாத்துவதை இடை நிறுத்துமாறும் அதனை முறையாக நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த உத்தரவிடுமாறு கோரியும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.