வாகன விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய றிஷாத் பதியுதீன்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பயணித்த வாகனம் கருவல கஸ்வெவ பகுதியில் விபத்துக்குள்ளாகியது.
வாகனம் பயணித்துக் கொண்டிருந்த போது விதியின் நடுவே திடீரென முச்சக்கர வண்டி ஒன்று குருகிட்டதால் முச்சக்கர வண்டி ஓட்டுனரை காப்பாற்றும் வகையில் சாரதி வாகனத்தை வீதியை விட்டு பாதையின் ஓரப்பகுதிக்கு திருப்பியுள்ளார்.இதனால் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
விபத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கோ அல்லது நபர்களுக்கோ எவ்வித காயமும் இல்லை என கருவலகஸ்வெவ போலீசார் தெரிவித்தனர். இதன் போது வாகனத்துக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.