உள்நாடு

பலப்படுத்தப்படும் அனுரவின் பாதுகாப்பு..!

ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க மற்றும் அக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களின் பாதுகாப்பனைப் பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க பங்கேற்கின்ற கூட்டங்களில் நவீன ரக சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அண்மைக்காலமாக அவர் கலந்து கொள்கின்ற கூட்டங்களுக்கு வருபவர்களை கண்காணிக்கும் நோக்கில் , கூட்டங்களில் சோலர் பொருத்தப்பட்ட சிசிரிவி கமரா மற்றும் நவீன தன்னியக்க சிசிரிவி கமராக்கள் பல பொருத்தப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் நேற்று (12) காரைதீவு மற்றும் சம்மாந்துறை பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி கூட்ட மேடைகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இவ்வாறான கமராக்கள் பல பொருத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதேவேளை கூட்டங்களுக்கு பைகளுடன் சமூகமளிப்பவர்கள் அழைக்கப்பட்டு விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கூட்டங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *