களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அடிக்கல் நாட்டு விழா..!
களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் நீண்டகால தேவையாக இருந்த மூன்று மாடிக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று புதன்கிழமை (10) கல்லூரி அதிபர் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.வெளிநாட்டமைச்சர் அலி சப்ரியின் ஏற்பாட்டில் இந்த கட்டிட தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளது.
கல்லூரி அதிபர் தலைமையில் இடம்பெற்ற அத்திவாரக்கல் நாட்டு விழாவில் வெளிநாட்டமைச்சர் அலி சப்ரி, மேல்மாகாண ஆளுநர் ஏயார்வைஸ் மார்ஷல் ரொஷான் குணதிலக,கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
இந்த கட்டிட தொகுதி கேட்போர்கூடம் மற்றும் விஞ்ஞான ஆய்வுக்கூடம் என்பவற்றை உள்ளடக்கிய மூன்று மாடி கட்டிடத் தொகுதியாக அமையவுள்ளது.அமைச்சர் அலி சப்ரி மேற்படி கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
(எம்.எஸ்.எம்.முன்தஸிர்)