பேருவளையில் துவங்கும் சஹ்மி சஹீதின் சாதனைப்பயணம்..!
பேருவளையில் துவங்கி, இலங்கையை கரையோரமாக நடந்தே சுற்றிவந்து சாதனை படைக்கும் நோக்குடன் ,பேருவளையைச்சேர்ந்த யூடியூபர் சஹ்மி ஷஹீத் ,எதிர்வரும் 13 ஆம் திகதி தனது சாதனைப் பயணத்தை துவங்கவுள்ளார் .
இவர் , கடந்த 2021 ஆம் ஆண்டில் முதல் முயற்சியாக பேருவளையிலிருந்து தெற்காக காலி வரை (50km) நடந்து சென்றதோடு, மிகக் குறைந்த செலவில் (1500/=) நாட்டின் 25 மாவட்டங்களுக்கும் 14 நாட்களில் சென்று வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் , சிவனொளி பாத மலைக்கு நடந்து சென்றமை,பேருவளையிலிருந்து.கொழும்புவரை 12 மணி நேரத்தில் நடந்து சென்றமை என பலகட்ட சாதனைகளை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரின் சாதனைகள் அனைத்தும் இவரது யூட்யூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்படுவதோடு,இவற்றின் அடுத்தகட்ட பாரிய பயணமாக ,இலங்கையைக் கரையோரமாக நடந்தே, வலம்வரும் நோக்குடன் எதிர்வரும் 13 ஆம் திகதி பேருவளையிலிருந்து பயணப்படவுள்ளார்.
பேருவளை , மஸ்ஸலவிலிருந்து தன் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள சஹ்மி சஹீதை வாழ்த்தி வழியனுப்பி வைப்பதற்காக, பேருவளையின் பெரும்திரளானோர் குறித்த தினத்தில் ஒன்றுகூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(பேருவளை முக்தார்)