இந்திய புகையிரத சிவில் பொறியியல் நிறுவனத்திற்கு பயிற்சிகளுக்காக சென்ற ஸ்ரீலங்கா புகையிரத திணைக்கள பொறியிலாளர் குழு..!
ஸ்ரீலங்கா புகையிரத திணைக்களத்தின் புகையிரத சிவில் பொறியிலாளர் எம்.சி நிசார் தலைமையிலான பொறியிலாளர் குழு கடந்த வாரம் பயிற்சிக்காக இந்திய புகையிரத சிவில் பொறியியல் நிறுவனத்திற்கு சென்று பயிற்சிகளைப் பெற்றிருந்தனர்.
புகையிரத ஓடு பாதை மற்றும் சிவில் சம்பந்தமான மாகோ- ஓமந்தை இந்திய புகையிரதத் திட்டத்திற்காகவே இப் பொறியிலாளர்கள் பயிற்சிக்காக சென்று நவீன தொழில்நுடப்ப பயிற்சிகளை பெற்றதாக புகையிரத சிவில் பொறியிலாளர் எம்.சி.நிசார் தெரிவித்தார். இவர் கடந்த இரண்டரை தசாப்தங்களாக புகையிரத சிவில் பொறியியல் துறை சேவையாற்றிவருகின்றார் சாய்ந்தமருதுாரைச் சேந்தவரும் கல்முனை சாஹிராக் கல்லுாாியின் பழைய மாணவருமாவார்.
( அஷ்ரப் ஏ சமத்)