உள்நாடு

பாரிந்த ரணசிங்க சட்ட மா அதிபராக பதவிப் பிரமாணம்..!

ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க 49வது சட்டமா அதிபராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவையில் நேற்று வியாழக்கிழமை (12.07.24) ஏகமனதாக அனுமதிய வழங்கியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க, பதில் சட்டமா அதிபராக கடந்த முதலாம் திகதி (01.07.2024) பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிலையில் தற்போது சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *