உள்நாடு

அனுராதபுர மாவட்டத்தில் 5000 மாணவர்களுக்கு ஜனாதிபதி உதவித் தொகை

பல்வேறு பொருளாதார கஷ்ட்டங்களு மத்தியில் கல்வி கற்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அனுராதபுரம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 5 ஆயிரம் மாணவர்களுக்கு ஜனாதிபதி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வின் ஆலோசனைக்கிணங்க பல்வேறு கஷ்ட்டங்களு மத்தியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தில்  இருந்து மாணவர் உதவித் தொகை வழங்கப்படவுள்ளது . குறித்த திட்டம் தொடர்பில் வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மற்றும் அரச அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.


(எம்.ரீ.ஆரிப் – அநுராதபுரம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *