உள்நாடு

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் கேட்போர் கூட நிர்மானப்பணிக்கு அடிக்கல் நடும் நிகழ்வு..!

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும்,இக் கல்லூரியின் பழைய மாணவருமான  எச். எம். எம். ஹரீஸ் அவர்களின் முயற்சியின் பயனாக கல்லூரியின்  75ஆம் ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையில் கல்வி அமைச்சின் ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில்  கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில்  நிர்மாணிக்கப்படவுள்ள கேட்போர் கூடத்திற்கும், புதிய மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  (11) இடம்பெற்றது.
கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி அதிபர் எம்.ஐ. ஜாபீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவருமான  எச்.எம். எம்.ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கேட்போர் கூடத்திற்கு  அடிக்கல்  நாட்டி வைத்தார்.
இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்கிரம கௌரவ அதிதியாக கலந்து கொண்டதுடன் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம், கல்முனை பிரதேச செயலாளர் ஜெ. லியாக்கத் அலி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், அம்பாரை மாவட்ட பொறியியலாளர் ஏ. எம். ஸாஹீர் உட்பட பிரதி கல்வி பணிப்பாளர்கள், கணக்காளர், உதவி கல்வி பணிப்பாளர்கள், கோட்டக் கல்வி பணிப்பாளர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் பாடசாலை முன்னாள் அதிபர்கள், கல்முனை, சாய்ந்தமருது கல்வி கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், திணைக்கள தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர்கள், இணைப்பாளர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள் சங்கத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
(அஸ்ஹர்  இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *