உள்நாடு

அமைச்சருடன் பேச்சு..! பணி நிறுத்தம் நிறைவு…!

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின் ரயில் நிலைய அதிபர்கள் கட்டுப்பாட்டாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதனடிப்படையில் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தோருக்கு பதவியை விட்டு விலகியதாக வழங்கப்பட்ட கடிதங்களை மீளப் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.இதன் பின் ரயில் நிலைய அதிபர்கள் கட்டுப்பாட்டாளர்கள் தமது பணி நிறுத்தத்தை கை விடுவதென அமைச்சரிடம் உறுதியளித்தனர். அரசு விதித்திருந்த காலக்கெடுவுக்குள் பணிக்கு வராததால் இன்று நண்பகல் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தோருக்கு பதவியை விட்டு வலகியதற்கான கடிதங்கள் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *