உள்நாடு

வொய்ஸ் ஒப் ஏறாவூர் அமைப்பின் ஏற்பாட்டில் அறிவுக்களஞ்சியம் நிகழ்வு

மாணவர்களின் அறிவுத்திறனை விருத்தி செய்யும் நோக்குடன் ஏறாவூர் கல்வி கோட்டத்தில் காணப்படுகின்ற பாடசாலைக்கு இடையிலான தொடரான அறிவுக்களஞ்சியம் போட்டி நிகழ்வு வொய்ஸ் ஒப் ஏறாவூர் அமைப்பின் ஏற்பாட்டில் மூன்றாவது கட்டமாக 11/07/2024 வியாழக்கிழமை இன்று ஏறாவூர் மட் / அல் அஸ்ஹர் மகளிர் உயர்தர பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

இன்றைய அறிவுக்களஞ்சிய போட்டியில் ஏறாவூர் முனீரா பாலிகா மகாவித்தியாலயம் மற்றும் ஏறாவூர் மட் அல் -அஸ்ஹர் மகளிர் உயர்தர பாடசாலை மாணவிகள் பங்குபற்றி இருந்தனர்.

இரண்டு சுற்றுக்களாக இடம்பெற்ற அறிவுக்களஞ்சியப் போட்டியில் மொத்த புள்ளிகளின் அடிப்படையில் மேலதிக 60 புள்ளிகளால் ஏறாவூர் மட் / அல் அஸ்ஹர் மகளிர் உயர்தர பாடசாலை இடம்பெற்ற அறிவுக்களஞ்சிய போட்டியினுடைய வெற்றியினை தனதாக்கி கொண்டது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நஸீஹா கன்ஷ்ரெக்சன் நிறுவனத்தின் பணிப்பாளரும் ஏறாவூர் நகரசபையின் முன்னாள் தவிசாளருமான எம்.எஸ்.எம்.நழீம் கலந்து சிறப்பித்ததுடன் மட் /
அல் -அஸ்ஹர் பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.நவாஸ் ,பிரதி அதிபர் எம்.வை.எம்.நஸீர் மற்றும் ஓய்வுபெற்ற அதிபர் எம்.எஸ்.அபுல்ஹஸன் வொய்ஸ் ஒப் ஏறாவூர் அமைப்பின் தலைவர் ஏ.எச்.எம்.றாபி உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர் .

போட்டியில் பங்குகொண்ட மாணவர்களுக்கு நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ் போன்றனவும் நிகழ்வின் முடிவில் வழங்கி வைக்கப்பட்டன.

(உமர் அறபாத் -ஏறாவூர்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *