உள்நாடு

இடை நிறுத்தப்பட்டுள்ள 13 முஸ்லிம் பெண் அதிபர்களின் பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும்; – பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சர் அறிவிப்பு

இடை நிறுத்தப்பட்டுள்ள 13 பெண் அதிபர்களின் பெறுபேறுகள் அடுத்த வாரம் வேளியிடப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயன்த் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது தெரிவித்தார்.

வினைத்திறன் கா ண் தடை தாண்டல் பரீட்சையின் போது ஹிஜாப் அணிந்து பரீட்சைக்கு தோற்றியதற்காக 13 அதிபர்களின் பெறுபேறுகள் இடை நிறுத்தப்டமை குறித்து பாராளுமன்றத்தில் இன்றைய பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்வாறு இடை நிறுத்தப்பட்டிருந்த திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டமை குறித்து கருத்து தெரிவித்த அவர் அதேபோல் இந்த பெறுபேறுகளும் அடுத்த வாரம் வெளியிடப்படுமென்றும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

இது தொடர்பாக இந்த அதிபர்கள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *