உள்நாடு

ஹிருணிகாவின் பிணை மனு கோரிக்கை ஒத்திவைப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் மனு மீதான விசாரணை இன்று வியாழக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது பிணை விண்ணப்பத்திற்கு எதிராக சட்டமா அதிபர் எழுத்துமூல சமர்ப்பணங்களை தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *