உள்நாடு

சமூக விஞ்ஞான போட்டியில் மாகாண மட்டத்திற்கு தெரிவாகிய கல்பிட்டி அல் அக்ஸாவின் மாணவ, மாணவியர்

அன்மையில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டிற்கான வலய மட்ட சமூக விஞ்ஞான போட்டி நிகழ்ச்சியில் 1000 க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றிருக்க கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையைப் பிரதிநிதித்துவம் செய்திருந்த 5 மாணவ , மாணவியர் வெற்றி பெற்று மாகாண மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.

அதற்கமைய தரம் 07 இல் கல்வி கற்கும் மாணவி M.N. ஆய்ஷா மனால், தரம் 08இல் கல்வி பயிலும் மாணவன் M.S.M. அத்னான், தரம் 09இல் கல்வி கற்கும் மாணவி M.T.F. அஹ்ரா, தரம் 10இல் பயிலும் மாணவி M.R.F.ரிஷானி மற்றும் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி M.I. ஆத்திகா ஆகிய 5 மாணவ, மாணவியர் வெற்றி பெற்று புத்தளம் வலய மட்டப் போட்டியில் வெற்றி பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகி பாடசாலைக்கும் ஊரிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

அம்மாணவர்ளுக்கு பாடசாலைச் சமூகம் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் , மற்றும் வழி நடாத்திய அதிபருக்கும் ஊக்கமளித்த பெற்றோர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளை தெரிவிப்பதுடன் தேசிய மட்டத்திற்கு தெரிவாக வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *