உள்நாடு

தன்னைத் தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் சார்ஜன்ட்

அனுராதபுரம் ருவன்வெலி மஹா சேயா பொலிஸ் காவலரணில் கடமையாற்றிய 55 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக உடமழுவ பொலிசார் தெரிவித்தனர்.

உடமழுவ பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட உப பொலிஸ் காவலரணில் கடமையாற்றிய வுளங்குளம் வத்த அனுராதபுரம் என்ற முகவரியில் வசித்து வரும் பொலிஸ் சார்ஜன்டே உயிரிழந்துள்ளார்.

இன்று (11) காலை 05.00 மணியளவில் குறித்த சார்ஜன்ட் அவருக்கு கடமைக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு உயிரியை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடமழுவ பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

 

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *