உள்நாடு

தர்காநகர் ஸாஹிரா கல்லூரிக்கு புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வு

தர்கா நகர் ஸாகிரா கல்லூரி 1982 க.பொ.த. சாதாரண தர மாணவர்களால் தர்கா நகர் பொது நூலகத்துக்கு புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வு 07/07/2024 மேற்படி மாணவர் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் ஏ.ஜே.எம்.பாரி தலைமையில் நடைபெற்றது.

நூலகத்தின் பொறுப்பாளர் ஜயமினி ஜயசூரிய ஸில்வா, நூலகத்தின் ஆலோசனை கமிட்டி தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் எம்.இஸட்.எம்.நயீம் செயலாளர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் பொறியியலாளருமான ஹசீப் மரிக்கார் ஆகியோரிடம் புத்தகங்கள் கையளிக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் 1982 ஓ. எல்.மாணவர் அமைப்பின் பொருளாளர் தேசபந்து ஏ. பீ. எம். ஸுஹைர் ஹாஜியார், செயலாளர் ஏ.ஐ. எம். பஹ்மி, உப செயலாளர் எம், ஆர், எம், ஹில்மி,உப பொருளாளர் அல்ஹாஜ் எம், எஸ், எம், பைஸர், நிறைவேற்று கமிட்டி தலைவர்,ஏ.டபிள்யூ.எம். பஹ்மி ஆகியோர்களும் கலந்து சிறப்பித்தனர். இதன்போது பெறுமதி மிக்க 80 நூல்கள் கையளிக்கப்பட்டன.


(படங்கள்:பேருவலை பீ. எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *