உள்நாடு

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் புனித முஹர்ரம் புது வருட நிகழ்வு

முஹர்ரம் 1446 ஆம் ஆண்டு புதுவருடத்தை சிறப்பித்து வரவேற்கும் முகமாக சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் சிறப்பு பயான் நிகழ்வொன்று நேற்று முன்தினம் திங்கட்கிழமை (08) இரவு ஏற்பாடு செய்யப்பட்டது.

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் தலைவர் ஏ. ஹிபத்துல் கரீம் தலைமையில், ஓய்வுபெற்ற ஆசிரியரும், பொறுப்புதாரியுமான மௌலவி எம்.எஸ்.எம் நுஃமான் (நளீமி)யின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை சூறா கவுன்சில் தலைவரும் முன்னாள் சிரேஷ்ட நிர்வாக அதிகாரி (SLAS) யுமான அஷ்ஷேக் எம்.ஐ.எம். அமீர் (நளீமி) விசேட பேச்சாளராகக் கலந்து கொண்டார்.

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் செயலாளர் மற்றும் பொருளாளர், அதன் பொறுப்புதாரிகள் உட்பட உலமாக்கள், வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் ஜமாஅத்தார்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். இதன்போது பள்ளிவாசலின் பேஸ் இமாமினால் விஷேட துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *