உள்நாடு

கொழும்பில் ஒன்று கூடியுள்ள 15,000 க்கும் மேற்பட்ட போரா சமூகத்தினர்..!

கொழும்பில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர சமூகத்தினர் கொழும்பில் ஒன்று கூடியுளளனர் கடந்த ஜூன் 7 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா கண்காட்சி நிலையத்திலும் பம்பலப்பிட்டியில் உள்ள போரா சமுகத்தினரின் பள்ளிவாசலிலும் மகாநாடு மற்றும் மத நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இவர்களது மகாநாட்டினை இலங்கை நடத்துவதற்காக அரசாங்கம் ,வெளிநாட்டு அமைச்சு ஜனாதிபதி செயலகம் சகல அரச வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.
கொழும்பில் உள்ள சகல 5 நட்சத்திர ஹோட்டல்களிலும் இவர்கள் தங்கி நிற்கின்றனர் அத்துடன் பொலிஸார் சகல பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்
போரா தாவூதி தலைவர்கள் உறுப்பிணர்கள் குஜராத், பாக்கிஸ்தான் ்,இந்தியா மற்றும் ஏனைய நாடுகளிலும் இருந்து கொழும்பினை கடந்த வாரமாக வருகை தந்துள்ளனர்.. இதனால் சுற்றுலாத்துறை க்கும் இவர்களது வருகை நன்மை பயக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

(அஷ்ரப் ஏ சமத்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *