உள்நாடு

உப தலைவராகத் தெரிவான உதுமாலெப்பைக்கு மாவட்டத் தலைவர் அலியார் மாபிர் வாழ்த்து

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.யின் நிரந்தர உறுப்பனர் எம்.ஐ. உதுமாலெப்பை கடந்த ஜுன் 29ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற வருடாந்த பொதுக் கூட்டத்தில் (AGM) தேசிய உபதலைவர் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.

இத் தெரிவு குறித்து (MLYF) அம்பாறை மாவட்ட சம்மேளனத்தின் மாவட்டத் தலைவர் அலியார் மாபிர் தனது வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில், எம்.ஐ. உதுமாலெப்பை அவர்களுடைய சமூக சேவை தொடரவும் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வழங்கவும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து வாழ்த்துகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அகில இலங்கை சம்மேளனத்தின் முன்னாள் தேசிய தலைவரான எம்.ஐ. உதுமாலெப்பை அவர்கள், முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளன நிறைவேற்றுப் பணிப்பாளர் என்பதுடன் அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்கத்தின் ஆணையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *