அநுர குமார சீனங்கோட்டை செல்கிறார்.
தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பு எதிர்வரும் 15ஆம் திகதி அக் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் பேருவளை சீனங்கோட்டையில் இடம்பெறவுள்ளது.
”மறுமலர்ச்சிக்காக நாம் அனைவரும் ஒன்றினைவோம்” எனும் தொணிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பு முஸ்லீம்கள் செரிந்து வாழும் பேருவளை சீனங்கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம் மக்கள் சந்திப்பு சீனங்கோட்டை நளீம் ஹாஜியார் மாவத்தையிலுள்ள அல்ஹாஜ் அன்வர் யூசுப் இன் இல்லத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி இரவு 8 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸானாயக்க தலைமை தாங்குவதுடன் அக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்ளள்ளமை குறிப்பிடத்தக்கது.