உள்நாடு

YMMA பேரவையின் 74ஆவது தேசிய மாநாடு

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் ’74 வது’ வருடாந்த தேசிய மாநாடு அதன் தேசியத் தலைவர் அல்-ஹாஜ் இஹ்ஸான் ஏ. ஹமீட் தலைமையில் கடந்த சனிக்கிழமை (29) அன்று இலங்கை மன்ற விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில் நடைபெற்றது.

இவ் விசேட விழாவின் அங்கமாக நாடளாவிய ரீதியிலான வை.எம்.எம்.ஏ. கிளைகளுக்கான தேசிய விருதுகளும் வழங்கப்பட்டன. இதன்போது தேசிய சிறந்த கிளை, தேசிய சிறந்த பொருளாளருக்கான இரு விருதுகளை பதுளை வை.எம்.எம்.ஏ. கிளை சுவீகரித்துக் கொண்டது.

சிரேஷ்ட ஊடகரும், பதுளைக் கிளையின் பொதுச் செயலாளருமான ஃபாயிஸ் தாஹிரைக் கொண்ட பதுளைக் கிளைக்கான விருதினை கிளைத் தலைவர் ரிஸ்வி அபூ தாஹிர் பெற்றுக் கொண்டார்.
தேசிய சிறந்த பொருளாளருக்கான விருதினை ஃபைஸல் முபாரக் பெற்றுக் கொண்டார்.

பசறை ‘கெமுனு’ மகாவித்தியாலய முன்னாள் மாணவரான எம்.எம்.எம். பைசல் (ரோயல்) காத்தான்குடி எம். முபாரக் (பானு) பசறை மர்ஹுமா மர்யம் பீவி தம்பதியின் சிரேஷ்ட புதல்வரும், பதுளை ‘தக்கிய்யா’ பள்ளிவாசலின் தலைவர் ஃபைரூஸ் முபாரக் (சிட்டி) பதுளைக்கிளையின் முன்னாள் செயலாளர் ஆஸாத் முபாரக் (கபூரி) மௌலவியின் மூத்த சகோதரருமாவார்.

(வாஹிட் குத்தூஸ்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *