உள்நாடு

06 வது தடவையாக கிண்ணத்தைச் சுவீகரித்தது மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர்  தேசிய பாடசாலை  அணி..!

மட்டக்களப்பின் பாடுமீன்களின் சமர் என வர்ணிக்கப்படும் மாபெரும் மகளிர் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சிசிலியா பெண்கள்  தேசிய பாடசாலை அணியை வீழ்த்தி வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை அணி சம்பியன் கிண்ணத்தைச் கைப்பற்றியது.
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் 11 ஆவது வருடமாக  நடைபெற்ற இச்சுற்றுப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து  142 ஓட்டங்களைப் பெற்றது.
இந்நிலையில் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய வின்சன்ட் மகளிர் பாடசாலை 19.2 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில்வெற்றியை தன தாக்கிக் கொண்டது
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார், மட்டக்களப்பு கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி சாமினி ரவிராஜ்,எம்.ஹரிகரராஜ்,வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை அதிபர் தவத்திருமகள் உதயகுமார்,பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
(அஸ்ஹர்  இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *