உள்நாடு

ஜனாதிபதி தேர்தல்; இன்று கலந்துரையாடல்

ஜனாதிபதித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து பேச்சு நடத்துவதற்காக அரசாங்க அச்சகர் , தபால் மா அதிபர் ஆகியோர் இன்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் செயற்பாடுகள் , வாக்குச் சீட்டு அச்சிடல் , வாக்காளர் அட்டை விநியோகம் உட்பட்ட பல விடயங்கள் இந்த சந்திப்பின்போது ஆராயப்படவுள்ளன.

இன்றைய அரச பணியாளர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தபால் துறையினரும் பங்கேற்றுள்ளதால் , இன்றைய சந்திப்பில் தபால் மா அதிபர் பங்கேற்பாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *