உள்நாடு

அஷ்ரப் சிஹாப்தீனின் “சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்” கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வு..!

பன்னூலாசிரியரும் ஒலி, ஒளிபரப்பாளருமான அஷ்ரப் சிஹாப்தீனின் ‘சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்’ கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வு   தெமடகொட வீதி, வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில் வகவம் தலைவர் கவிமணி என். நஜ்முல் ஹூஸைன் தலைமையில் வெற்றிகறமாக நடைப்பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான  ஏ.எச்.எம். பெளசி அவர்களும் ,விசேட அதிதியாக மீன்பிடித்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. அனுஷா கோகுல பெர்ணாண்டோ அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கௌரவ அதிதிகளாக எம்.எச்.எம். அன்ஸார் (மாஷா பில்டர்ஸ்), எம்.என்.எம், பிஷ்ருல் அமீன் (சட்டத்தரணி), மொஹமட் மில்ஹான் (ஜப்பான் லங்கா என்டர்பிரைஸஸ்), கவிஞர் நாச்சியாதீவு பர்வீன், ஆகியோர் பங்கு கொள்ளவுள்ளனர்.
வரவேற்புரையை கவிஞர் சிமாரா அலியும் வாழ்த்துரையை மாத்தளை எம்.எம். பீர்முகம்மது அவர்களும் வழங்கினார்கள்.
(எம்.எம்.றம்ஸீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *