உள்நாடு

புத்தளத்தில் இடம்பெற்ற மாகாண மட்ட அல்குர்ஆன் போட்டிகள்

இலங்கை ஜம்இய்யத்துல் குர்ரா அமைப்பினால் புத்தளம் முஹாஜிரீன் அரபுக் கல்லூரியில் நடாத்தப்பட்ட மாகாண மட்ட அல்குர்ஆன் போட்டிகள் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

அந்நிகழ்வுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மாவட்டத்தின் உப தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் (அல் மிஸ்பாஹி) அவர்களும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உறுப்பினர் மற்றும் இஹ்யாவுல் உலூம் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேக் சனூஸ் ரஹ்மானீ அவர்களும் கெளரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

பல மத்ரஸாக்கள் மாணவர்கள் இப்போட்டியில் கலந்து சிறப்பித்தனர். இப் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வை மிக அழகிய முறையில் ஏற்பாடு செய்த ஜம்இய்யத்துல் குர்ரா நிர்வாகத்திற்கும் முஹாஜிரீன் அரபுக் கல்லூரியின் நிர்வாகம்,அதிபர், உஸ்தாத்மார்கள் மற்றும் பழைய மாணவர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம் நகரக் கிளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *