உள்நாடு

புதிய அதிபருக்கு அ.இ.ஜ.உலமா புத்தள கிளையின் வாழ்த்து

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் அதிபராக நியமிக்கப்பட்டுள்ள S.R.M.M. முஹ்ஸிக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

அதிபராக நியமிக்கப்பட்டுள்ள S.R.M.M. முஹ்ஸி புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரி, ஜாமிஆ நளீமிய்யா ஆகியவற்றின் பழைய மாணவரும், பேராதனை பல்கலைகத்தின் பட்டதாரியும் ஆவார். இவர் பல சமூகம் சார்ந்த விடயங்களில் ஈடுபட்டவர் மற்றும் பல மஸ்ஜித்கள் மத்ரஸாகளுக்கு உதவிகளையும் வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் உலமாக்களுடன் மிகவும் நெருங்கி பழகக்கூடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கும்இ ஆசிரியர்களுக்கும் சிறந்த சேவையை வழங்க பிரார்திப்பதோடு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை சார்பாக வாழ்த்துக்களையயும் தெரிவித்துக்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *