உள்நாடு

ஆசிரியர்கள் மீண்டும் 9ஆம் திகதி சுகயீன விடுமுறை.

அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கக் கூட்டமைப்பினரின் அழைப்பின் பேரில் இன்று அதிபர் ஆசிரியர்களுடைய போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பொது நூலகத்தில் ஒன்றுகூடிய அனைத்து தொழிற்சங்கங்களும் எட்டாம் மற்றும் ஒன்பதாம் திகதிகளில் சுகயீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதிபர் ஆசிரியர்கள் ஒன்பதாம் திகதி மட்டும் கீழ் வரும் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

சம்பள ஏற்றத்தாழ்வுகளை களைய வற்புறுத்துதல், அரசாங்கம் கொண்டு வரும் அடக்குமுறையை எதிர்த்தல் மற்றும் கல்விச்சுமையை பெற்றோர்கள் மீது சுமத்துவதை நிறுத்துமாறு கட்டாயப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் நாடு முழுவதும் அதிபர் ஆசிரியர்கள் எதிர்வரும் ஒன்பதாம் திகதி(09.07.24) சுகயீன விடுமுறையை அறிவிக்குமாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கைகள் பற்றிய தீர்மானங்கள் பத்தாம் திகதிக்கு பின்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டு அறிவிக்கப்படும்.

(எம் கே.எம்.நியார்)
பதுளை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *