உள்நாடு

“கல்விக்குக் கை கொடுப்போம்” எனும் தொனிப்பொருளில் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்ட ஆரம்ப நிகழ்வுகள்..!

தர்காநகர் ரூமி ஹாசிம் பவுண்டேசன் அனுசரணையில் ,பேருவளை , மருதானை அல் பாஸியதுல் நஸ்ரியா ஆண்கள் பாடசாலையின் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இலவச மேலதிக வகுப்புக்களை நடத்தும் செயற்திட்டத்தின் ஆரம்பவிழா,கடந்த 23 ஆம் திகதி பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் திருமதி யஹ்யா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு,பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் அயராத முயற்சியில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை மருந்தாக கூட்டுத்தாபன முன்னாள் தலைவரும்,ரூமி ஹாசிம் பவுண்டேசன் ஸ்தாபகருமான பிரபல சமூக சேவகர் கலாநிதி அல்ஹாஜ் ரூமி ஹாசிம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் , ரூமி ஹாசிம் பவுண்டேசன் செயலாளர் அல்ஹாஜ் ஜசூக் அஹமட்,தர்காநகர் அல் ஹம்ரா தேசியப் பாடசாலை முன்னாள் அதிபர் அல்ஹாஜ் M.Z.M நயீம் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ரபீஸ் ஹம்ஸா ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொண்டதோடு பாடசாலை ஆசியர்கள் ,மாணவர்கள்,பழைய மாணவர்கள் ,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பெற்றோர்கள் ,புத்திஜீவிகள் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

(பேருவளை பீ.எம் முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *