உள்நாடு

சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்தார் முபீன் றிஸான்

மன்னார் சிலாவத்துறையைப் பிறப்பிடமாகவும், புத்தளம் ஆலங்குடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சாதிக்குல் முபீன் றிஸான், அகில இலங்கை சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அகில இலங்கை சமாதான நீதவானாக புத்தளம் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.ஏ.எம்.சீ.சதுருசிங்க முன்னிலையில் இவர், சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இவர் சிலாவத்துறையச் சேர்ந்த அப்துல் ஹமீது சாதிக்குல் முபீன் என்பவரின் மூத்த புதல்வராவார்.

சிறந்த சமூக சேவையாளரும், கல்பிட்டி பிரதேச செயலகத்தில் நிதி உதவியாளராகவும்(Financial Assistant) கடமையாற்றும் சாதிக்குல் முபீன் றிஸான் கல்பிட்டி இணக்க சபையிலும் கடமை புரிகிறார்.

மும்மொழிகளிலும் ஆற்றல் கொண்ட இவர் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை தொடர்பில் சிறந்த ஆளுமையுடன் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *