விளையாட்டு

கோபா கால்பந்தாட்டத் தொடரின் அரையிறுதியில் மெஸ்ஸியின் ஆர்ஜன்டீனா

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் வயனல்மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டினா அணி காலிறுதி ஆட்டத்தில் பலமிக்க ஈக்வடோர் அணியை 4:2 என்ற பெனால்டி கோல்களின் அடிப்படையில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

நடப்பாண்டின் கோபா கால்பந்துத் தொரில் நேற்று நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சம்பியனான ஆர்ஜென்டினா அணி சம பலமிக்க அணியான ஈக்வடோர் அணியை எதிர்த்து விளையாடியது.

இப் போட்டியின் ஆரம்பம் முதல் இரு அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் போட்டியின் முழு நேர ஆட்டத்தில் இரு அணிகளும் ஒவ்வொரு கோல்களை உட்செலுத்தியிருக்க போட்டி 1:1 என சமநிலையில் முடிந்தது. ஆர்ஜென்டினா தரப்பில் லிசண்ட்ரோ மார்ட்டினசும், ஈக்வடோர் தரப்பில் கெவின் ரோட்ரிக்சும் தலா ஒரு கோலை உட்டிசெலுத்தியிருந்தனர்.

இதனையடுத்து வெற்றிஇ தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் இடம்பெற்றிருந்தது. இதில் ஆர்ஜென்டினா 4:2 என்ற பெனால்டி கோல் கணக்கில் ஈக்வடோர் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *