உள்நாடு

அக்குறணை தீ கட்டுப்பாட்டுக்குள்; விசாரணைகள் துரிதம்

அக்குறணை 7 மைல் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் இன்று காலையில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தினால் நான்கு மாடிகளைக் கொண்ட கட்டடம் முற்றாக தீயினால் சேதம் அடைந்துள்ளது.

இக்கட்டிடத் தொகுதியில் கீழ் மாடி முதலாம் மாடிகளில் பேக்கரி மற்றும் இரண்டாம் மாடி மூன்றாம் மாடி ஆங்கில சர்வதேச பாடசாலையும் அமைந்துள்ளன. கண்டி தீயணைக்கும் படையினர் ஸ்லத்திற்கு உடன் விஜயம் செய்து ஏனைய கட்டிடங்களுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதன் போது அக்குறணை பிரதேச செயலாளர் ருவன்திகா குமாரி ஹென்நாயக வருகை தந்து நேரடியாகப் பார்வையிட்டார். மாத்தளை கண்டி போக்குவரத்து பொதுப் போக்குவரத்துச் சேவை இதன் போது தடைப்பட்டிருந்தது.

மேலதிக விசாரணைகளை அலவத்துக்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


(இக்பால் அலி)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *