உள்நாடு

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா காத்தான்குடி வருகை..! பதுறியா வித்தியாலயத்தில் ஸ்மார்ட் வகுப்பறை திறந்து வைப்பு..!

எதிர் கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசா அவர்களின் பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், காத்தான்குடி பதுறியா வித்தியாலயத்தில் ஸ்மார்ட் வகுப்பறை   எதிர் கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இதனை திறந்து வைத்த பின்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் எதிர்க் கட்சித் தலைவர் கலந்துரையாடினார்.
இதையடுத்து எதிர்க் கட்சித் தலைவர் பாடசாலையில் ஆங்கில நூல்களை வாங்குவதற்காக பாடசாலைக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியைக் கையளித்தார்
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருமான கணேசமூர்த்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் முஸ்தபா  ,காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரி ஹக்கீம், பாடசாலை அதிபர் ரிப்கான்  உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(அஸ்ஹர் இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *