உள்நாடு

2024ல் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படுவது சரியானதே; ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருத்து

ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என்பதால் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் திணைக்களம் மேற்கொண்டு வரும் நடவடிக்கை சரியானதென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் திணைக்களம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு தற்காலிக தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த மனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு தன்னிடமோ தனது சட்டத்தரணிகளிடமோ மனுதாரர் ஆலோசனை பெறவில்லையென்றுமா அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மனுவை சமந்திர தயான் லேனவ என்பவர் தாக்கல் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *