Saturday, October 5, 2024
Latest:
உள்நாடு

திருமலை ஸாஹிரா மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் வெளியாகின; இன்று பரீட்சை திணைக்களத்தில் நேரடியாக பெற ஏற்பாடு

திருமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ளன. பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள் தம்மைத் தொடர்பு கொண்டு பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளமை குறித்து அறிவித்ததாக கல்லூரி அதிபர் எம்.எம்.எம். முஹைஸ் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக பரீட்சை பெறுபேறுகளை இணையத்தில் வெளியிட முடியாதுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்ததாகவும்பெறுபேறுகளை அடுத்த வாரமே அனுப்பி வைக்க முடியுமென குறிப்பிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனால் இன்றைய தினம் பாதிக்கப்பட்ட 70 மாணவிகளையும் பரீட்சை திணைக்களத்துக்கு அழைத்துச் சென்று பெறுபேறுகளை நேரடியாகப் பெற்றுக் கொள்ளவுள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *