உள்நாடு

அராஜக நடவடிக்கைக்கு எதிராக மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு

அதிபர், ஆசிரியர்களால் கடந்த 26ஆம் திகதி கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட அமைதியான ஆர்ப்பாட்டத்தின் போது அரசாங்கம் மேற்கொண்ட நீர்த்தாரை பிரயோகம், கண்ணீர்ப்புகை பிரயோகம் என்பவற்றிற்கு எதிராக அதிபர், ஆசிரிய தொழிற்சங்க கூட்டனியினர் இலங்கை மனித உரிமைகளுக்கான ஆணையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

இதற்காக உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் இவ்வாறான அமைதியான போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க முனைவது ஜனநாயகத்திற்கு எதிரான செயலென்றும் அரசாங்கம் இது போன்ற கீழ்த்தரமான செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(எம்.கே.எம்.நியார்- பதுளை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *