உள்நாடு

வெலிகம ரிம்ஸாவின் இறையச்சம் சிறுகதைக்கு இரண்டாமிடம்..!

சர்வதேச ரீதியாக நடைபெற்ற மறைந்த பன்னூலாசிரியர், எழுத்தாளர், டாக்டர் ஹிமானா சையத்துடைய நினைவுச் சிறுகதைப் போட்டியில், வெலிகம ரிம்ஸா முஹம்மதின் “இறையச்சம்” என்ற சிறுகதை இரண்டாம் இடத்தைச் சுவீகரித்துக் கொண்டது.
இந்த சிறுகதைப் போட்டியில், மலையக எழுத்தாளரான தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் “கண்ணீர்” என்ற சிறுகதை மூன்றாம் இடத்தைத் தட்டிக் கொண்டது.
கொழும்பு – வெள்ளவத்தை, சைவ மங்கையர் கழகத்தில் இடம்பெற்ற புத்தகக் கண்காட்சி நிகழ்வின் போது, “எழுத்தாளர் தெணியான்” அரங்கில் நன்னூல் பதிப்பாளர் அப்துல் காதர் கரங்களினால் வெலிகம ரிம்ஸா முஹம்மத், “இறையச்சம்” சிறுகதைக்கான பணப் பரிசிலையும் பெற்றுக் கொண்டார். நிகழ்வில், நூலாசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

( ஐ. ஏ. காதிர் கான் )

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *