விளையாட்டு

விளையாட்டுத்துறையில் தேசிய ரீதியில் சாதனை புாிந்த ஊடகவியலாளருக்கு கௌரவம்..!

விளையாட்டுத்துறையில் தேசியரீதியில் சாதனை புாிந்த ஊடகவியலாளா் என்.எம்.எம்.பாயிஸ் காத்தான்குடி மீடியா போரத்தினால் திங்கட்கிழமை (01) காத்தான்குடி அமானுல்லாஹ் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டாா்.
காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவா் எம்.எஸ்.எம்.நூா்தீன் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
ஊடகவியலாளா் என்.எம்.எம்.பாயிஸ் அண்மையில் இலங்கையில் நடைபெற்ற Sri Lanka masters athletics championships – 2024 விளையாட்டு விழாவில் 5000 மீற்றா் வேகநடை போட்டியிலும், 3000 மீற்றா் தடை தாண்டல் போட்டியிலும் பங்குபற்றி இரண்டாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்திருந்தாா்.
ஊடகவியலாளா்களின் அடைவுகளைப் பாராட்டும் அதேவேளை பாதிக்கப்படும் மற்றும் நலிவுற்றிருக்கும் ஊடகவியலாளா்களின் நலன்புாி விடயங்களிலும் தொடா்ச்சியாக கவனம் செலுத்திவருகின்றது. அந்த வகையிலேயே இந்த கௌரவிப்பும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் போரத்தின் ஆயுட்கால தலைவர் மெளலவி எஸ்.எம்.எம். முஸ்தபா உட்பட, செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் என  பலரும் கலந்து கொண்டனா்
இதன்போது ஊடகவியலாளா் என்.எம்.எம்.பாயிஸ் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டாா்.
( அஸ்ஹர்  இப்றாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *