உள்நாடு

பேருவளையில் நடைபெற்ற முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணியின் மாதாந்த கூட்டம்..!

களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணியின் மாதாந்த சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்வு 2024.06.30 அன்று , பேருவளை மருதானையில் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்களின் வழிகாட்டலில் , தற்காலிக தலைவர் இஹ்ஸான் ஹம்ஸா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணியின் களுத்துறை மாவட்ட அங்கத்தவர்கள் , பேருவளை முன்னாள் நகர பிதா அல்ஹாஜ் மஸாஹிம் மொஹமட், முன்னாள் பாணந்துறை பிரதேச சபை எதிர்கட்சித் தலைவர் தாஹிர் பாஸி , களுத்துறை முஸ்லிம் லீக் வாலிபர் முன்னணியின் செயலாளர் சம்சுல் மக்கி மற்றும் பேருவளை சமூக நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இச்சிறப்பு கூட்டத்தில் , களுத்துறை மாவட்ட மக்களின் கல்வி மற்றும் பலதரப்பட்ட சமூகப்பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

(பேருவளை பீ.எம் முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *